18

siruppiddy

மார்ச் 07, 2015

அமெரிக்கா நம்பிக்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாம்!

இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை  நிறைவேற்றும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி, இலங்கை அரசாங்கம் மனித உரிமைப் பேணல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள்
 நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தலைமையேற்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம்  தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக