18

siruppiddy

மார்ச் 27, 2015

இடைநிறுத்தப்பட்ட உதவிகளை மீண்டும் வழங்க தீர்மானம்!!!

மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிறிலங்காவுக்கான உதவிகளை, அமெரிக்கா மீண்டும் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சி சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்படவில்லை. இதனால் அமெரிக்காவில் பல உதவிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

புதிய அரசாங்கம் மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது.
எனவே புதிய அரசாங்கத்துக்காக இடைநிறுத்தப்பட்ட உதவிகளை மீள வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக