18

siruppiddy

மே 04, 2013

ஏற்றுமதியில் வீழ்ச்சி! பொருளாதாரமும்=

 
 இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிறிலங்காவின் ஏற்றுமதி 10.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
 2012ஆம் ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அமெரிக்க டொலர் 1709.2 மில்லியனாக இருந்தது. எனினும், இவ்வருடத்தில் அந்தத் தொகை அமெரிக்க டொலர் 1526.2 மில்லியாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 முழுமையான ஏற்றுமதியில் விவசாய உற்பத்தி ஏற்றுமதி 6.9 வீதமாகவும், தொழில்துறை ஏற்றுமதியில் 11.5 வீதமாகவும் தாது ஏற்றுமதி 64.5 வீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
 சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஏற்றுமதி வீழ்ச்சியானது அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
 கடன்பெறக் கூடிய நாடுகளிடமிருந்து உச்ச அளவிலான கடன்களைப் பெற்றுள்ள நிலையில், அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கு மீண்டும் கடன்பெற வேண்டிய நிலைலேயே தற்போதைய அரசாங்கம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 இந்த நிலையில், பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
 கடந்த மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பொருட்களுக்கான விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்தளவே உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
 அரசாங்கம் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மீது பெரும் சுமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 குறைந்தளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கூறிய போதிலும், பெருமளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் உற்பத்தி, சேவைகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 இதனால், மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்பதுடன் நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
9

 2012ஆம் ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அமெரிக்க டொலர் 1709.2 மில்லியனாக இருந்தது. எனினும், இவ்வருடத்தில் அந்தத் தொகை அமெரிக்க டொலர் 1526.2 மில்லியாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 முழுமையான ஏற்றுமதியில் விவசாய உற்பத்தி ஏற்றுமதி 6.9 வீதமாகவும், தொழில்துறை ஏற்றுமதியில் 11.5 வீதமாகவும் தாது ஏற்றுமதி 64.5 வீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
 சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஏற்றுமதி வீழ்ச்சியானது அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
 கடன்பெறக் கூடிய நாடுகளிடமிருந்து உச்ச அளவிலான கடன்களைப் பெற்றுள்ள நிலையில், அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கு மீண்டும் கடன்பெற வேண்டிய நிலைலேயே தற்போதைய அரசாங்கம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 இந்த நிலையில், பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
 கடந்த மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பொருட்களுக்கான விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்தளவே உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
 அரசாங்கம் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மீது பெரும் சுமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 குறைந்தளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் கூறிய போதிலும், பெருமளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் உற்பத்தி, சேவைகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 இதனால், மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்பதுடன் நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்


இவ்வருடத்தின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிறிலங்காவின் ஏற்றுமதி 10.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக