18

siruppiddy

மே 06, 2013

பாக்-ஆப்கான் இடையே எல்லை பிரச்சினை: ?

 
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிடையே 'துராந்து லைன்' என்ற எல்லை கோட்டை ஆங்கிலேயர்கள் வகுத்து கொடுத்து இருக்கின்றனர். இருந்தும் அவர்களிடையே எல்லை மீறுவதாக பிரச்சினை இருந்து வருகிறது.
 இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பாகிஸ்தானின் தற்போதைய எல்லைகளை ஆப்கான் அரசு அங்கீகரிக்காது என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து பாக்-ஆப்கான் எல்லை பாதுகாப்பு படை போலீசார் மோதிக்கொண்டனர். இந்த வாரம் இரண்டாவது முறையாக நடந்த சண்டையில் பெரிய அளவில் உயிர் சேதம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதில் ஒரு ஆப்கான் எல்லைப்படை போலீசார் கொல்லப்பட்டார். இரு பாகிஸ்தான் போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கான் எல்லையில் பிரச்சினையை தூண்டுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்கான் எல்லையில் உள்ள மக்கள், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக