18

siruppiddy

மே 25, 2013

கிரகங்களைக் காணும் அரிய சந்தர்ப்பம் இலங்கையருக்கு!

மூன்று கிரகங்களை வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் தற்போது இலங்கையர்களுக்குக் கிடைத்துள்ளது.
வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வடமேல் திசையாக வானத்தில் தென்படும் என கொழும்பு பெளதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த மூன்று கிரகங்களும் நாளை 26 ஆம் திகதியும், நாளை மறுதினமான 27 ஆம் திகதியும் விண்ணில் தென்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் இவ்வாறானதொரு காட்சி, 2021 ஆம் ஆண்டிலேயே தென்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பௌதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்றைய தினம் சந்திர கிரகணம் ஒன்றும் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், ஆசிய நாடுகளில் அது தென்படும் என்றும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக