18

siruppiddy

மார்ச் 31, 2015

தமிழ்மக்களுக்கு சந்திரிகா தலைமைகுழு தீர்வு காணும் ???

சந்திரிகா தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு தமிழ்மக்களுக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் - இரா.சம்பந்தன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அதிபர் ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும்...

மார்ச் 29, 2015

தாக்குதலுக்கு ஆளான இலங்கை அதிபர் சிறிசேனாவின் தம்பி மரணம்!!!

இலங்கை அதிபர் சிறிசேனாவின் தம்பி பிரியந்தா சிறிசேனா (வயது 40). தொழில் அதிபர். கொழும்பில் இருந்து 215 கி.மீ. வட கிழக்கே உள்ள பொலன்னருவா என்ற இடத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கும் அவரது நண்பரான லக்மல் என்பவருக்கும் 26–ந்தேதி இரவு ‘திடீர்’ தகராறு ஏற்பட்டது. இதில் பிரியந்தா தலையில் லக்மல், கோடரியால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவருக்கு முதலில் உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கொழும்பு நகருக்கு விமானத்தில்...

மார்ச் 27, 2015

இடைநிறுத்தப்பட்ட உதவிகளை மீண்டும் வழங்க தீர்மானம்!!!

மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிறிலங்காவுக்கான உதவிகளை, அமெரிக்கா மீண்டும் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்தவின் ஆட்சி சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்படவில்லை. இதனால் அமெரிக்காவில் பல உதவிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. புதிய அரசாங்கம் மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே...

மார்ச் 25, 2015

ரூ. 2000 கோடி நட்டஈடு கோரி அமைச்சர் ரவி கடிதம்

  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடமும் லங்கா பத்திரிகை நிறுவனத்திடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணியூடாக கடிதங்களை நேற்று அனுப்பி வைத்தார். தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காகவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடாக...

மார்ச் 21, 2015

அரசாங்க செயலணியும் பிரசன்னமாக வேண்டும்

  அரசாங்கத்தினால் வடமாகாண்தில் குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்படும் போது, அரசாங்கத்தின் காணி விடுவிப்பு செயலணியும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வசாவிளானில் பொது மக்களை குடியேற்றுவதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், உண்மையில் அங்கு குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் நேற்று தங்களின் காணிகளை பார்வையிட சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி இருந்தனர். இந்த...

மார்ச் 18, 2015

தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.. காணொளி,

உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் - ஓவியர் சந்தானம்         ஜெனீவா நோக்கி அறைகூவல் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

பழைய தேர்தல் முறைமையிலேயே புதிய தேர்தல் முறைமை

19ம் அரசியல் திருத்தச் சட்டத்துடன், புதிய தேர்தல் முறைமையையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் பழைய தேர்தல் முறையின் கீழேயே தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமையை அமுலாக்குமாறு பல்வேறுத் தரப்புக்களினால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் புதிய தேர்தல் முறை அமுலாக்கப்பட்டால் 3 மாதங்களுக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து...

வடக்கு முதல்வர் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு??'

  யாழில் இன்று  சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. இச்சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில்,  ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கையில்...

மார்ச் 14, 2015

ஆதரவாக குரல் கொடுக்கும் யேர்மனிய நண்பர்கள்

  ஈழத்தமிழர்களின் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையோடு  , யேர்மனிய இளையோர்கள் குரல் கொடுக்கின்றனர் . அவ் வகையில்  எதிர்வரும் மார்ச் 16 திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் அனைவரும் தமது தாயக உறவுகளை நெஞ்சில் பதித்து நீதி கேக்க ஜெனீவா செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றனர்  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

மார்ச் 09, 2015

அடுத்தவாரம் ஜெயகுமாரிக்கு விடுதலை?

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரி அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் சிறிலங்கா விஜயத்தை முன்னிட்டு அவர் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுடனான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மோடிக்கு காண்பிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இங்குஅழுத்தவும்...

மார்ச் 07, 2015

அமெரிக்கா நம்பிக்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாம்!

இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை  நிறைவேற்றும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி, இலங்கை அரசாங்கம் மனித உரிமைப் பேணல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும்...

சிறிலங்காவுக்கு ஊடகவியலாளர் சுனந்த மீண்டும் !!!

கடந்த அரசாங்க அட்சிக்க் காலத்தில் விடுக்கப்பட்டிருந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டை விட்டுச் சென்று சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இம்மாதம் மீண்டும் 27ஆம் திகதி சிறிலங்கா திரும்புகிறார். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று இவர் நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

மார்ச் 06, 2015

சர்வதேச அரங்கில் மங்கள சமரவீர சொன்னதை செயலில் காட்ட வேண்டும்-

 ஊடகவியலாளர் சுனந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா.மனித உரிமை பேரவையில் சர்வதேச நாடுகள் மத்தியில் கூறிய விடயங்களை செயல்படுத்தி காட்ட வேண்டும் என இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் பேச்சாளரும் ஊடகவியலாளருமான சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். ஜெனிவா ஐ.;நா.மனித உரிமை பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை தொடர்பாக கேட்ட போதே சுனந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். இங்குஅழுத்தவும்...

மார்ச் 04, 2015

அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை???

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடக்கும் முன்னர் மூன்று முக்கிய ஊழல் மோசடிகள் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதுசெய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசிலிடமும் விசாரணை...

மார்ச் 02, 2015

யுத்தக்குற்ற ஆவணப்படத்தை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வர்???

சிறிலங்காவின் தமது அடுத்த யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதுவிரைவில் வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் குறித்த தமது ஆவணப்படங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனால் சிங்கள மக்கள்...