18

siruppiddy

மே 22, 2015

ஆர்ப்பாட்டங்கள் தெற்கில் பிழையாக பிரசாரம் செய்யப்படுகிறது


யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தெற்கில் பிழையான கருத்துகள் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் இந்த போராட்டங்கள் யாழ்ப்பாணத்தில்உள்ள சிங்கள மக்களுக்கு எதிராக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஜாதி;க்க ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் சிங்களவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை மறுத்துள்ளதுடன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் போது இனரீதியான எந்தவிதமானகருத்துப் பிரயோகமும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
கூறியுள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக