18

siruppiddy

மே 18, 2015

கவிஞர் ரதிமோகனின் எம் ஓலம்கேட்கிறதா

கொத்துக் குண்டுகளால்
கொத்துக்கொத்தாய்
கொன்று குவிக்கப்பட்டோம்
கொலை வெறியர்களின்
கோரப்பற்களால்
கிழித்தெறியப்பட்ட உடல்கள்
சிந்திய உதிரத்தில்
முல்லைமண் தோய்ந்திருக்க
நந்திக்கடலும் செங்கடலானது…
பிஞ்சுக்குழந்தைகள் எம்
நெஞ்சைக் கிழித்தன
பீறிட்டு வந்த
குண்டுகள்…
பதுங்குக்குழிக்குள்
பதுங்கிய எம்மை
பாய்ந்து வந்த செல்
எமக்கு புதைகுழி
அமைத்து சென்றது..
கத்தினோம் கதறினோம்
ஓலமிட்டோம் ஓடிவந்தோம்
காப்பாற்ற எவருமின்றியே
கதறியே உயிர் துறந்தோம்….
ஆசைகள் கனவுகள்
சுமந்த ஆத்மாக்களாய்
அலைகிறோம் திரிகிறோம்
அழுகிறோம் கேட்கிறதா
ஆக்கம்
கவிஞர் ரதிமோகன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக