18

siruppiddy

மே 01, 2015

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிராக முறைப்பாடு.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார நாயக்க குமா­ர­துங்­கவின் ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்­றுள்ளதாக கூறப்படும் மோசடி ஒன்று தொடர்பில் உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்ட விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­து­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர்களான வாசு­தேவ நாண­யக்­கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு மற்றும் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் வாசுதேவநாணயக்கார குறிப்பிடு கையில்;
முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க உள்­ளிட்ட தரப்­பினர் ஜோன் கீல்ஸ் நிறு­வ­னத்­துக்கு கொழும்பு துறை­மு­கத்தின் 10 ஏக்கர் நிலப்­ப­ரப்பை கப்­பல்­க­ளுக்கு எரி­பொருள்
 விநி­யோ­கிக்க வழங்­கி­யிருந்தனர். இவ்­வாறு தனி­யா­ருக்கு வழங்­கிய முறைமை தவ­றா­னது உயர் நீதி­மன்றம் தீர்­ப்ப­ளித்தும் அந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர், குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு எவ்­வித நடவ்­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வில்­லை.
அது­கு­றித்த விச­ர­ணைகள் எந்­த­ளவில்
 இடம்­பெற்­ரு­வ­ரு­கின்­றன என்­பதை தெரிந்­து­கொள்­ளவே இந்த முறைப்­பாட்­டினை செய்­தோம்.2007 ஆம் ஆண்டு உயர் நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள தீர்ப்­புக்கு அமைய அக் காலப் பகு­தியில் இடம்­பெற்ற குறித்த மோசடி தொடர்பில் ஆணைக்­குழு விசா­ர­ணையை முன்­னெ­டுக்­க­வில்­லை­. எனவே விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­து­மாறு கோரி முறைப்­பாட்டை பதிவு செய்தோம் . இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக