18

siruppiddy

மே 02, 2015

கைதிகளை விடுவிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில்!


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து வகைபிரிக்கப்பட்ட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் எத்தனை கைதிகள் இருக்கின்றவர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன?, போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள், தண்டனைக்காலம் நிறைவடைந்தவர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் அவர்களை விடுவிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு கட்டம் கட்டமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக