18

siruppiddy

ஜூலை 16, 2015

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நிகழ்வில் முதலமைச்சரின் சிறப்புரை!

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் ஆண்டுதோறும் நடத்தும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாயகத்தின் இன்றைய நிலவரம் தொடர்பில் 
உரையாற்றவிருக்கிறார். இந்நிகழ்ச்சி இம்மாதம் (ஜுலை) 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குலண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் ( Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD)நடைபெறவுள்ளது.
வரையறுக்கப்பட்ட ஆசனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அனுமதிச்சீட்டுக்களை ( தனி நபர் : 10 பவுண்டுகள், சிறுவர்களுக்கு இலவசம்) முன்கூட்டியே பெற்றுக்கொண்டு ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்குஅறிவுறுத்தப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஆனந்தி சூரியப்பிரகாசம் (+44 208 543 7226),
கோபி றட்ணம் ( +44 758 597 8377),
பெய்லோன் யோகரட்ணம் (+44 795 693 9874),
விஜய் செந்தில் (+44 772 333 3205)
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக