18

siruppiddy

ஜூலை 28, 2015

இதுதான் காலம் பூ.சுகியின் பசி


பிச்சை எடுக்கிறேன்
அப்போதும்
இச்சை கொண்டுதான்
பார்க்கிறார்கள்……..

பாவம் என்கிறார்கள்
பாவிகள்
அருகில் வந்து
அழகாய் இருக்கிறாய்
வருகிறாயா ?
தருகிறேன் என்கிறார்கள்……

உடல் விக்க
விரும்பவில்லை
ஒருவேளை உணவூட்டி
என் குழந்தை
உயிர் காக்க விரும்புகிறேன்……..

சில சமயம்
பசியின் கொடுமைதாங்கா
பாவிகளின் இச்சைக்கு
அடிபணிய எண்ணுவதுமுண்டு

என்ன செய்வது
இப்படியொரு நிலை
எனக்கு தோன்றியிருக்காது
போரில் என்னவர்
உயிர்காக்கப்பட்டிருந்தால்
ஆக்கம் பூ.சுகி 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக