18

siruppiddy

ஜூலை 09, 2015

கைதானவர் முன்னாள் போராளி அல்ல! - மனைவியே காட்டிக்கொடுத்தார்

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.எப்.கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், தெல்லிப்பளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்டவர் யாழ்.தெல்லிப்பளையைச் சேர்ந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டது. 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கடந்த திங்கட்கிழமை கைது
 செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இடம்பெற்று வந்துள்ளது. இதனால் மனைவியே 119 எனும் அவசர பொலிஸ் பிரிவிற்கு அழைத்து இத்தவறான தகவலை வழங்கியுள்ளார். குறித்தநபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அது தொடர்பான அறிக்கை எமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால், குறித்த நபர் விடுதலைப்புலி உறுப்பினர் இல்லை என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் யுத்த காலத்தில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒருவார யுத்தப்பயிற்சியை நிறைவு செய்தபோதிலும், இயக்கத்தில் செயற்படவில்லை. இவரது சகோதரனும், சகோதரியுமே இயக்கத்தில் செயற்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்தநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக