18

siruppiddy

ஜூலை 24, 2015

கறுப்பு ஜூலை கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்!!!

ஆடை களைந்து
நிர்வாண மாக்கி
ஆண்மை அழித்தும்
அறுத்தும் அக்கிரமம்..!
எந்த நாட்டிலும்
இல்லாத இம்சை
பெண்மையின்
பிறப்புறுப்பில்
கைக் குண்டு..!
பட்டியல் போட்டு
படைகளையும்
காடையர்களயும்
கட்டறுத்து காட்டிய
கொடுமைகள்..
மூட்டிய தீ !
முடியவில்லை
மூர்க்கத் தனம்.
இன அழிப்பின்
ஆரம்பம். வீதி
ஓரங்களில் கொதிக்கும்
தார் பீப்பாக்களுக்குள்
பிஞ்சுக் குழந்தைகள்..!
பொறுமையின்
எல்லைக்கு
அப்பாலும் அராஜகம்
உலகம் கண்மூட
உயிர்ப்புடன்
உன்னதப் போர்…
அகிலம் அதிர
உரிமைத் தாண்டவம்
தமிழன் பெருமை
தரணி கண்டது
ஒற்றைத் துப்பாக்கி
ஓட ஓட விரட்டியது
தமிழர் சேனை
தளைத்தது.
வையம் வாயடைக்க
விடுதலை மையம்
கொண்டது.அச்சம்
மேலிட தந்திரம்
தலை நிமிர
நாம் பயங்கரவாதிகளாம்…!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக