18

siruppiddy

ஜூலை 17, 2015

ரவிகரனுடன் பிரித்தானிய தூதரக அதிகாரி சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அரசியல் செயலாளர் டோம் சோபருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவில் ரவிகரனது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது ,கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான
அரசியல் சூழல், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும், தமிழர் தாயகத்தில் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது
அத்துடன் தமிழ் இளைஞகள் மீது திணிக்கப்படும் புலம்பெயரும் நிர்ப்பந்தம் ,சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மத அடையாளங்கள் திணிப்புக்கள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக