18

siruppiddy

ஜூலை 12, 2015

அடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு மட்டக்களப்பில்!

காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் விசேட கூட்டத்திலேயே திகதி விவரம் பற்றி இறுதி 
முடிவெடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது கடந்த அமர்வை திருகோணமலையில் நடத்தியது.
மட்டக்களப்பில் இதற்கு முன்னரும் பொது அமர்வு நடத்தப்பட்டிருந்தது. அதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காகவுமே அங்கு மீளவும் அமர்வு நடைபெறுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக