18

siruppiddy

ஆகஸ்ட் 14, 2015

சிறைகளில் இன்னும் சித்திரவதைகள் தொடர்கின்றனவா?

இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள அறிக்கை குறித்து தமக்கு தெரியாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் பின்னரும் இலங்கை சிறைகளில் படையினரின் சித்திரவதைகள் தொடர்வதாக லண்டனை தளமாகக்கொண்ட FED என்ற அமைப்பை கோடிட்டு தெ காடியன் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவோரே இந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அமைப்பு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் இருந்து மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது 148 சம்பவங்கள் இவ்வாறான வகையில் இடம்பெற்றுள்ளன.
அந்த சித்திரவதைகள், 2015ஆம் ஆண்டிலும் தொடர்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவோர் பெரும்பாலும் தமிழர்களாக உள்ளனர்.
இதற்கான காரணம் அவர்களில் பெரும்பாலானோரின் உறவுகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாகும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக