18

siruppiddy

ஆகஸ்ட் 23, 2015

பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்???


லங்கையில்  அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
ஏற்கனவே பொதுத்தேர்தல் நடைபெற்றமை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நிதிக்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காக ஏற்கனவே மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரும் விரைவில் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன துஸ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தொடர்பான விசாரணைகளும் நிறைவுக்கு வந்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக