18

siruppiddy

ஆகஸ்ட் 22, 2015

கடற்படைவசமிருந்த 40 ஏக்கர் காணிகள் ஒப்படைப்பு!

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 40 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஒப்புதல் கடற்படையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளது. சம்பூரில் 
உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியதன் பின்னர், மூதூர் பிரதேசத்திற்கு பொறுப்பான கடற்படை தளபதி விசன்க புஷ்பகுமார, கடற்படையினரிடமிருந்த காணிகளில் 40 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதியிடம் கையளித்தார். 
அண்மைக்காலமாக சம்பூரில் கடற்படையினரிடமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை மீண்டும் அவர்களிடமிருந்து மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று இந்த நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த பகுதிகளிலும் மக்கள் குடியமர்த்தப்படலாம் என்று நம்பப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக