18

siruppiddy

ஆகஸ்ட் 24, 2015

ஊழல் மோசடி கோட்டாபய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது, தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
குறித்த விசாரணைகளின் நிமித்தம், கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்தப்படவுள்ளது.
பாரியளவிலான ஊழல் மோசடி ஆணைக்குழுவால் கோட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகள், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலைகளை நடத்தியமை, லங்கா ஹொஸ்பிடல் பங்கு மோசடி, மிக் விமானக் கொள்வனவு உள்ளிட்ட பல ஊழல் மோசடிகள் குறித்து கோட்டா மீது ஏற்கனவே லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணை நடத்தியிருந்தன.
எனினும், தமது கைதினை தடுக்கும் வகையில் கோட்டா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து, நீதிமன்றமும் அதற்கான அனுமதியை கொடுத்திருந்தது. எனினும், குறிப்பிட்ட சில விடயங்களை தவிர்த்து ஏனைய குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைதுசெய்யலாமென நீதிமன்றம் தெரிவித்தது.
தொடர்ந்து, பிரபல ரகர் வீரர் தாஜூதீனின் கொலைச் சம்பவத்திலும் கோட்டா பேசப்பட்டார்.
இந்நிலையில், இன்றைய விசாரணைகளின் பின்னர் கோட்டா அநேகமாக கைதுசெய்யப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக