18

siruppiddy

அக்டோபர் 19, 2013

புலி ஆதரவாளரிடம் இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள்


இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீளாய்வு அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவரிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்பிலான இந்த மீளாய்வு அறிக்கையும் பரிந்துரைகளும் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எனினும், இந்த ஆவணம் புலி ஆதரவாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ரசல் லீ என்பவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரக் காரியாலயம் உறுதி செய்துள்ளது.

உள்ளக இரகசிய அறிக்கையொன்று அம்பலமானமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு இதுவரையில் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக