18

siruppiddy

அக்டோபர் 08, 2013

வெற்றியுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடாது -


இந்தியாவுக்கு விளக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்று எண்ணிவிடக் கூடாது என இந்தியாவுக்கு எடுத்து விளக்கியுள்ளது கூட்டமைப்பு.இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போதே இதுகுறித்து விளக்கப்பட்டது. இரு நாள் பயணமாக நேற்று நண்பகல்

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பலதரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்று இரவு 7 மணிக்கு விடுதியயான்றில் சந்தித்தார்.

 இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடம் வரை நீடித்த இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்.
   
தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினோம். அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதையும் தெரிவித்தோம்.தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்,

எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்று வருகின்ற நில அபகரிப்பு நடவடிக்கைகள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடும், இராணுவத்தினரின் அதிகரித்த பிரசன்னமும் நீக்கப்பட வேண்டும்

என்பதையும் வலியுறுத்தினோம்'' என்றார். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது என்று யாரும் நினைக்கக் கூடாது என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம்.

இதற்குப் பதிலளித்த குர்ஷித், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா நிர்ப்பந்திக்கும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தையும் தாண்டி அதிகாரத்தைப் பகிர்வதற்கு இந்தியா வலியுறுத்தும். இலங்கை அரசு, இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து

தப்பிப்பதற்கு ஒரு போதும் விடமாட் டோம் என்று தெரிவித்தார் என்றார் சம்பந்தன். இதேவேளை புதிய பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராட்டுவதுடன் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றி

பெற்றமைக்கு இந்திய அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் குர்ஷித். அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் கூட்டமைப்பு புதியதொரு பாதையில் பயணம் செய்வதாகவும் வடமாகாண
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக