18

siruppiddy

அக்டோபர் 15, 2013

முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்



வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் கொழும்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்
கடந்த வாரம் நிகழ்ந்த சத்தியப் பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கு அவரது மனைவி விபத்தில் சிக்கியதும், கட்சி தலைவரின் இரட்டை நிலைபாடுமே காரணம் என தகவல்கள் வெளிவந்தன.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடுகளில் உள்ள உறுதியையும் முதல்வரிடம் அவர் வெளிப்படுத்தினார்.

2ம் இணைப்பு
வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் கொழும்பில் இரண்டாவது சத்தியப்பிரமாணம்
வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் திரு சி வி விக்கினேஸ்வரன் முன் நிலையில் கொழும்பில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்

கடந்த வாரம் நிகழ்ந்த சத்திய பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை இருவரும் தம்மிடம் தெரியப்படுத்தியதுடன் இனி வரும் தமது செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் இருப்பதுடன் வடமாகாணத்தில் தமது முழுமை ஒத்துளைப்பை வழங்குவதாக தம்மிடம் உறுதி மொழி தந்ததாகவும் எமது செய்திச் சேவைக்கு கருத்துரைத்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

முறையே இருவரும் ரொலோ ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

(மேலதிக தகவல்கள்)
மன்னார் ரொலோ மாகாண சபை உறுப்பினர் கலந்து கொள்ளாமைக்கு காரணம் “விபத்து”: அரசியல் சாயல் இல்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக