18

siruppiddy

அக்டோபர் 26, 2013

புலிகள் ஒன்றுகூடுகிறார்கள் :கனடாவில்


கனடா பிரதமர் கொழும்பில் நடக்கும் உச்சி மாநாட்டிற்குச் செல்லமாட்டார் என்று அறிவித்ததை தொடர்ந்து இலங்கை அன் நாடு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் சிங்களவரான றோகான் குணரட்ண என்பவர்,

புலிகள் தற்போது கனடாவில் ஒன்றுசேர ஆரம்பித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா சென்றடைந்த படகில் சில தமிழ் இளைஞர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கனேடிய அரசை

குறைசொல்ல, புலிகள் அங்கே மீண்டும் இணைய ஆரம்பித்துள்ளார்கள் என்று இவர் குற்றஞ்சாட்டி வருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இலங்கை அரசின் கொள்கை வகுப்பு செயலாளர்களுள் ஒருவரான றொகான் குணரட்ண இது குறித்து தாம் கனேடிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக