18

siruppiddy

ஏப்ரல் 28, 2015

வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கை!

வெள்ளை வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்பு செயற்பட்டாளர்கள் கடத்தி காணாமல் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதுகாப்பு துறைசார் பிரதானிகள் மூவர் பற்றிய இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த அறிக்கை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு பிரதானிகளில் மூன்று பேரில் இருவர் ஒய்வு பெற்றுக் கொண்டுள்ளனர்.
இராணுவ மேஜர் ஒருவர் தொடர்பிலும் தனியான அறிக்கையொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக