18

siruppiddy

ஏப்ரல் 29, 2015

நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது

யாழ்.மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்ககூறியது யார்?: விமலை மடக்கிய ரணில்!
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கவிடாமல தடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளிற்கு உத்தரவிட்டது யார் என விமல் வீரவன்சவை பார்த்து கேட்டு, அவரை வாயடைக்க வைத்துள்ளார் ரணில். 
நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்று எம்.பிக்களின் சிறப்புரிமை தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது உரையாற்றிய விமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்டையாட பொலிஸ் அதிகாரியொருவரை நியமித்து, அவருக்கு அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவி தரலாமென அரசு வாக்களித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ரணில், “கிடைக்கும் முறைப்பாடுகளிற்கு அமைவாகவே விசாரணைகள் நடக்கின்றன. சில முறைப்பாடுகள் தவறென கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்.பிக்களை வேட்டையாட வேண்டிய தெவை எமக்கில்லை.
ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்களை மைத்திரிக்கு வாக்களிக்க விடாது தடுக்குமாறும், அப்படி தடுத்தால் பதவி உயர்வுதருவதாகவும் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு வாக்களித்தது யார்? நானா?” என விமல் வீரவன்சவை பார்த்து கேட்டார்.  இதற்கு பதிலளிக்க முடியாமல் அசடுவழிந்தபடி விமல் உட்கார்ந்திருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக