18

siruppiddy

செப்டம்பர் 25, 2013

இறுதி யுத்தத்தின் போது ஐ.நா தோல்வியடைந்து விட்டது -

 

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டோம் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 68ஆவது கூட்டத்தொடரில், பொதுவிவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர்

இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்ற முன்பாகவே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில், அமைப்பு ரீதியாக ஐ.நா சபை தோல்வியை தழுவியுள்ளது. எனவே குறித்த நடவடிக்கைகளை

எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை. அத்துடன் ஐ.நா அமைப்பு முழுமையாக செயற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக