18

siruppiddy

செப்டம்பர் 22, 2013

பெரும்பான்மை வெற்றியை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டைப்பு

 
 
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கோசங்களுடன் தேர்தல் பிரச்சர பணிகளை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாத்தான வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக பரிஸ்தமிழ்.கொம்மின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான நிருபர் தெரிவிக்கின்றார்.

  இதுவரை தமிழ்த் தேசத்துக்கு எதிராக இன அழிப்பின் உச்சக் கட்டம் நிகழ்தப்பட்ட முல்லைத் தீவு மற்றும் தமிழீழத்தின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி மாவட்ட முடிவுகள் வெளிவந்துள்ன. இந்த இரண்டு மாவட்டங்களிலும் மகிந்த அரசாங்கத்துக்கு நல்ல பதிலடியை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

  இதன் படி, கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 36,323 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 7737 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. முல்லைத் தீவில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 27,620 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 7063 வாக்குகளும்

 கிடைக்கப்பெற்றுள்ளது. வடதமிழீழத்தின் எல்லா மாவட்டங்களிலும் சரத் பொன்சேகாவின் ஐனநாயகக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  
இவற்றின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை 7 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 2 ஆசனங்களும் கிடைத்துள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக