18

siruppiddy

செப்டம்பர் 05, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம்.

 
 யாழ். சுன்னாகம் பஸ் நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. வலி.தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில்  பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் மிகப் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.{புகைப்படங்கள்}





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக