18

siruppiddy

செப்டம்பர் 03, 2013

மண்டேலா இறந்து விட்டார்! மன்னிப்பு கேட்ட , ஜனாதிபதி


உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா(வயது 95) உடல் நலக்குறைவு காரணமாக பிரிடோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து நேற்று அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.
மண்டேலா வீடு திரும்பினாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தென் ஆப்ரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் ஜுமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாகவும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய அந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், புஷ்ஷின் தந்தையுமான சீனியர் புஷ்(வயது 95) தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி சேனலில் அவரது உதவியாளர் ஜிம் மெக்ராத் அறிவிப்பு வெளியிட்டிருந்தார், இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மண்டேலா உயிருடன் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கூறுவதா என எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து உடனடியாக டுவிட்டர் இணையதளத்தில் ஜிம் மெக்ராத் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்தியில், வாஷிங்டன் போஸ்ட் சேனலில் தவறுதலாக எனது கருத்து பதிவாகிவிட்டது. இதற்கு என் முட்டாள்தனம்தான் காரணம்.
யாருடைய மனதையாவது இது புண்படுத்தி இருந்தால் இதற்காக முழு மனதுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக