18

siruppiddy

செப்டம்பர் 11, 2013

அமெரிக்கா வடகொரியாவை எச்சரிக்கும்!!


 
"ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பேசி வருவதற்கு'' அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியா மீது எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கை குறித்து பேசுவதற்காக அமெரிக்கா பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் மில்லர் சீனா சென்றுள்ளார்.

அங்கு சீன பாதுகாப்பு அமைச்சர் வாங்க் கூன்ஜியாங்கை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு, அவர் கூறியது:
சிரியா மீது ஏன் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவரித்தேன். ரசாயன ஆயுதங்களை எந்த நாடும் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வதேச சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வடகொரியா தற்போது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக பேசுவது அச்சுறுத்துவதாக உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
சிரியா மீதான தாக்குதலுக்கு ரஷியாவுடன் இணைந்து சீனாவும் எதிர்ப்பு

தெரிவித்து வருகிறது. சீனாவின் நட்பு நாடான வடகொரியாவோ இன்னமும் ரசாயன ஆயுதங்களை குவித்து வைத்திருக்கிறது. தவிர, அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக