18

siruppiddy

செப்டம்பர் 16, 2013

விடுதலைப்புலிகளை எவரும் கொச்சைப்படுத்த முடியாது


தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை நவநீதம்பிள்ளையம்,பெண்புலிகள் தொடர்பில் சிவகாமி அவர்களும் கொச்சைப்படுத்தும் கருத்துக்ககைள வெளியிட்டுள்ளார்கள் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தூயதமிழில் பேசினால் அவன் புலிஎன்ற முத்திரை குத்தப்படுகின்றது என்று உணர்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மகேந்திரவர்மாவின் இயக்கத்தில் இயக்குனர் களஞ்சியம் நடித்த தமிழ் என்ற குறும்பட வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்த குறும்படத்தில் பயங்கரவாதி என்று அழைக்கப்படுகின்றது அதாவது சுத்த தமிழில் பேசுபவன் மது,புகைத்தல் அற்றவன் என்றால் அவன் புலி என்ற முத்திரை குத்துகின்றார்கள்.
உலகத்தில் அனைத்து படைகளும் குடிக்கின்றார்கள் புகைக்கின்றார்கள் பிராபாகரன் படை தான் குடிக்கவில்லை வெண்சுருட்டை பற்றவில்லை அவனை இவ்வாறுதான் இவ்வாறு புனிதமான அமைப்பு தான் விடுதலைப்புலிகள் அமைப்பு அடையாளப்படுத்துகின்றார்கள்.பேசாத படம் தொடக்கம் இன்றுவரை ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு திரைப்படம் தான் பாக்கின்றார்கள் இந்தபடங்கள் கொண்டுசெல்கின்ற ஆங்கில கலப்பு தமிழீழ தமிழர்களையும் தொடுகின்றது.
அவன் இயல்பாக பேசுகின்ற தமிழ் தூயதமிழ் அந்தவகையில் தான் மதுஅருந்தவில்லை என்றால் அவன்புலி,வெண்சுருட்டுபாவிக்கவில்லை என்றால் அவன் புலி என்ற அடையாளம் காண்கின்ற நிலையினை இந்த தமிழ் திரைப்படம் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இன்று விடுதலைப்புலிகள் அமைப்பினை கொச்சைப்படுத்த பார்க்கின்றார்கள்.இன்று சிங்கள சிறீலங்கா தொடர்பில் கடுமையான கருத்தினை நவநீதம்பிள்ளை வைத்துள்ளார் ஆனாலும் அவர் ஒருசந்திப்பில் புலிகள் இயக்கம் ஒருகொலைகார இயக்கம் என்று தெரிவித்துள்ளார்.கில்லாரிகிளிண்டன் ஒருகூட்டத்தில் அமெரிக்காவில் பேசுகின்றபோது அவர் சொன்னார் விடுதலைப்புலிகள் வன்முறையாளர்கள் அல்ல அவர்கள் விடுதலை போராளிகள் என்று சொன்னார்.
ஒருவனை கொலைசெய்கின்றவன் கொலைகாரன் கொலைசெய்கின்றவனை கொலைசெய்கின்றவன் விடுதலை போராளி அவன்தான் விடுதலைபோராளி இன்று நவநீதம் பிள்ளை இவ்வாறு கருத்தினை தெரிவித்துள்ளார்
1983 ஆன்று இந்திராகாந்தி அம்மையான் ஈழத்தில் நடைபெறுவது ஒரு இனப்படுகொலை என்று சொன்னார் இன்றும் இங்கிருக்கிற அதேஇந்திய அரசுகளிலம் சரி மற்றவர்களிலும் சரி இன்னும் இனஅழிப்பு என்பதை சொல்ல தயங்குகின்றார்கள் சொல்ல பின்வாங்குகின்றார்கள்.
உலகில் தகுதியானவர்கள் என்று கருதுபவர்கள் ஒன்றை சொல்லுவார்கள் பின்னர் அந்த கருத்தினை மறுத்து சொல்லுவார்கள் இதெல்லாம் நடைபெறுகின்றுகின்றது உலகத்தின் கணிப்பு என்ன என்று தெரியவில்லை இப்படியா கலங்கப்படுத்துகின்ற ஒரு உலகம் சிவகாமி என்ற அம்மையார் விடுதலைப்புலிகளின் பெண்புலிகளை மிகமிக கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.இப்படியான துன்பங்களுக்கு மத்தியில்தான் தமிழீழமக்கள் அவர்களின் போராட்டத்தினை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள் புலிகள் எவ்வளவு தூய்மையானவர்கள் என்பதை தமிழ் என்ற குறும்படம் சொல்லாமல் சொல்கின்றது.தமிழ்என்பது ஒருவாழ்வு ஒருபண்பாடு,ஒருமிகப்பெரிய பரப்பு தமிழை காக்கவேண்டும் என்ற உணர்வினை இந்த திரைப்படம் காட்டுகின்றது .
என்று தமிழ் எவ்வாறு தமிழ்நாட்டில் அழிந்துகொண்டு செல்கின்றது என்பது தொடர்பாக விரிவான கருத்தினை  என்றும் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.
{காணொளி, }

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக