18

siruppiddy

செப்டம்பர் 23, 2013

சாராயம் வாங்கிக் குடித்து விட்டு வீட்டிற்கு வாக்களித்த


'வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட றெமீடியசிடம் நேற்று காலை மூக்கு முட்ட சாராயம் வாங்கிக் குடித்து விட்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு வந்த யாழ். குடிமகனின் வீரச் செயல் இது. குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இந்தக் குடிமகன் றெமீடியஸ் சாராயம் எனத் தெரிவித்துக்

 கொடுத்த கசிப்பை பருகி விட்டு குருநகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு போயுள்ளார். அங்கு வீட்டின் மீது வாக்களித்து விக்னேஸ்வரனின் இலக்கத்திற்கும் புள்ளடி போட்டு விட்டு அங்கு வைத்தே பாட்டுப் பாடியபடி வெளியில் வந்துள்ளார்.
   
'கள்ளன் றெமீடியஸ் நல்ல சாராயம் தாறன் என்டு போட்டு கசிப்பை ஊத்தித் தந்துவிட்டான். அவனுக்கு தெரியாது என்னைப் பற்றி. "நான் யார் என்று புரிகிறததா??? இவன் தீ என்று தெரிகிறதா??? " என கமலின் பாடலைப் பாடியபடி ஆனோல்ட் நீ வாழ்க எனத் தெரிவித்தபடி சென்றதாக தெரியவருகின்றது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக