18

siruppiddy

ஆகஸ்ட் 01, 2013

சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவனம்!!

                          
செலுத்தி வருவதாக அறிவித்துள்ளது. தெரனியகல பிரதேச நூரி தோட்டத்தில் அண்மையில் தோட்ட முகாமையாளர் படுகொலை செய்யப்பட்டமை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. தெரனியகல நூரித் தோட்டத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தோட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. குற்றச் செயல்கள் விசாரணை செய்யப்பட்டு உரிய தண்டனை விதிக்;கப்பட வேண்டியது அவசியம் என தூதரகத்தின் தகவல் அதிகாரி ஜூலியன் ஸ்பேவன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் கடத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், கள்ளச்சாராயம், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நூரித் தோட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக