18

siruppiddy

ஆகஸ்ட் 05, 2013

குடிநீர்ப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வுத் திட்டம் ஏற்க??




மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. வெலிவேரிய பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தாக்குதல்களின் வேதனையை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நன்கு அறிவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் இதனை நல்லாட்சிக்கான பண்பாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பாவி மக்களின் நியாயமான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் இரணுவ அடக்குமுறைகளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். வெலிவேரிய குடிநீர்ப் பிரச்சினையானது மனிதாபிமானப் பிரச்சினை எனவும், இதனை இராணுவ பலத்தைக் கொண்டு அடக்கிவிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினரை விடவும் கலகத் தடுப்பு காவல்துறையினரை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது இராணுவ அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதனை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக