18

siruppiddy

ஆகஸ்ட் 06, 2013

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு!!


யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட நாவி­தன்­வெளி பிர­தேச மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு உத­வு­மாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.
நாவி­தன்­வெளிப் பிர­தே­ச­மா­னது கடந்த காலப் போர்ச்­சூ­ழலால் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாகும். இங்­குள்ள மக்கள் பலர் பல்­வேறு வச­தி­க­ளற்ற நிலை­யி­லேயே வசித்து வரு­கின்­றனர்.
இங்­குள்ள மத்­திய முகாம், சவ­ளக்­கடை, 4ஆம் கிராமம், குடி­யி­ருப்­பு­முனை, வேப்­பை­யடி போன்ற பல கிரா­மங்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில், மத்­திய முகாம் உட்­பட பல இடங்­களில் மீளக்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் தொடர்ந்தும் வச­தி­க­ளற்ற நிலையில் இருந்து வரு­கின்­றனர்.
குறிப்­பாக வீட்டு வசதி, வாழ்­வா­தார வசதி, வீதி அபி­வி­ருத்தி, ஆல­யங்­களின் புன­ர­மைப்பு, சிறுவர் அபி­வி­ருத்தி, சுயதொழில் வாய்ப்புக்கள் என வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அம்மக்கள் கேட்கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக