18

siruppiddy

ஆகஸ்ட் 24, 2013

மஹிந்தரின்அதிரடி நடவடிக்கை - அடக்குவாரா நவநீதம்பிள்ளை?


 
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிதாக சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 இந்த அமைச்சின் நிர்வாகத்தை தன் வசம் வைத்துள்ள மஹிந்த ராஜபக்ச, புதிய அமைச்சின் செயலராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியை நியமித்துள்ளார்.

 இவர் முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தவர் என்பதுடன், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தோனேசியாவுக்கான சிறிலங்கா தூதுவராகவும் பணியாற்றியவராவார். 

 இதையடுத்து, இதுவரை கோத்தாபய ராஜபக்சவின் வசம் இருந்து வந்த சிறிலங்கா காவல்துறை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்தப் புதிய அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 சிறிலங்கா காவல்துறையை, பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்குமாறு, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

 எனினும், பாதுகாப்பு அமைச்சில் இருந்து காவல்துறையை தனியாக பிரிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.

 இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, புதிதாக சட்டம் ஒழுங்கு அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தீவிர அக்கறை காட்டி வருகிறது என்று காண்பிக்கவே இந்தப் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிதாக சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 இந்த அமைச்சின் நிர்வாகத்தை தன் வசம் வைத்துள்ள மஹிந்த ராஜபக்ச, புதிய அமைச்சின் செயலராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியை நியமித்துள்ளார்.

 இவர் முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தவர் என்பதுடன், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தோனேசியாவுக்கான சிறிலங்கா தூதுவராகவும் பணியாற்றியவராவார்.

 இதையடுத்து, இதுவரை கோத்தாபய ராஜபக்சவின் வசம் இருந்து வந்த சிறிலங்கா காவல்துறை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்தப் புதிய அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 சிறிலங்கா காவல்துறையை, பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்குமாறு, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

 எனினும், பாதுகாப்பு அமைச்சில் இருந்து காவல்துறையை தனியாக பிரிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.

 இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, புதிதாக சட்டம் ஒழுங்கு அமைச்சை மஹிந்த உருவாக்கியுள்ளார்.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தீவிர அக்கறை காட்டி வருகிறது என்று காண்பிக்கவே இந்தப் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக