18

siruppiddy

ஆகஸ்ட் 07, 2013

முன்னெச்சரிக்கை நவனீதம்பிள்ளையின் வருகை -


  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இம்மாதம் சிறிலங்கா வரவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் சில விபரங்களை முன்னரே அறிவிக்க வேண்டுமென அவரை சிறிலங்கா அரசு கோரவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் எமது இணையத்துக்குத் தெரிவித்தன.
இந்த கோரிக்கையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
நவநீதன் பிள்ளையின் சிறிலங்கா விஜயத்தின்போது அவர் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் அரச சார்பற்ற அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், தமிழர் தாயகப் பகுதிகளில் அவர் பயணிக்கவுள்ள பிரதேசங்கள், அவருடன் வருகை தருவோர் பெயர் மற்றும் விபரங்கள் போன்றனவற்றை அவரது வருகைக்கு முன்னரே வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அறிவிக்க வேண்டுமென கேட்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறிலங்காவில் அவர் தங்கியிருக்கும் காலத்தில் அவரது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்ட எந்த விடயங்களில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக