18

siruppiddy

ஜூன் 25, 2013

பட்டினி போட்டு 2 பச்சிளம் குழந்தைகளை கொன்ற தாய்


சீனாவில் போதை மருந்துக்கு அடிமையான தாய் ஒருவர், பட்டினி போட்டு 2 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங் புறநகரைச் சேர்ந்த பெண் லீ. இவருக்கு 1 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இவரது கணவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லீ-யும் போதை மருந்து அடிமையானதால், குழந்தைகளை சரிவர கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தார்.
அவர்களுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்காமல் இருந்ததால், குழந்தைகள் பட்டினியால் வாடினர்.
இந்நிலையில் 2 குழந்தைகளும் தங்களது வீட்டில் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக