18

siruppiddy

ஜூன் 30, 2013

மக்களுக்கான நலன்கள் குறித்து கிழக்கு மாகாண சபை கவனம்


போர்ச் சூழல் நில­விய காலத்தில் பல்­வே­று­பட்ட இழப்­புக்­களை சந்­தித்தும் அடிக்­கடி உள்­ளக இடம்­பெ­யர்­வு­க­ளுக்கு ஆளா­கியும் வாழ்ந்த அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள காஞ்­சி­ரங்­குடா, தங்­க­வே­லா­யு­த­புரம் கிராம மக்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்­துள்ள போதிலும் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­படும் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலு­கைகள் முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை.
இத­னை­யிட்டு கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்த வேண்டும் என மாகாண சபை உறுப்­பினர் எம். இரா­ஜேஸ்­வரன் தெரி­வித்தார்.
கிழக்கு மாகா­ண­சபை அமர்வின் போது 02.07.2009ஆம் ஆண்டு மீள்­கு­டி­யமர்த்­தப்­பட்ட காஞ்­சி­ரங்­குடா, தங்­க­வே­லா­யு­த­புர கிராம மக்­களின் தேவைகள் குறித்தும் இம் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீதி குறித்தும் அவர் தனி­நபர் பிரே­ரணை சமர்ப்­பித்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், அம்­பாறை மாவட்­டத்தின் திருக்­கோவில் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட காஞ்­சி­ரங்­குடா கிராம சேவை­யாளர் பிரிவில் 68 குடும்­பங்­களும் சாகாமம் பிர­தேச செய­லாளர் பிரிவில் 126 குடும்­பங்­களும் 02.07.2009ஆம் திகதி மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டார்கள்.
இவர்­க­ளுக்கு தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்கள் தற்­கா­லிக கொட்­டில்­களை அமைத்துக் கொடுத்­தன. ஆனால் அர­சாங்கம் இம் மக்­க­ளுக்கு பொரு­ளா­தார உத­வி­களை அளிக்­க­வில்லை. வீட­மைப்பு வச­தி­களை செய்து கொடுப்­பதில் அக்­கறை காட்­டாமல் இருந்து வரு­கின்­றது.
அதே போன்று தங்க வேலா­யு­த­புரம் கிராம சேவை­யாளர் பிரி­வி­லுள்ள 424 குடும்­பங்­களும் கஞ்­சிக்­கு­டிச்­சாறு கிராம சேவை­யாளர் பிரி­வி­லுள்ள 406 குடும்­பங்­களும் 2009ஆம் ஆண்டு நடந்த வன்­செ­யலில் இடம்­பெ­யர்ந்­தார்கள். ஆனால் இம்­மக்­களை அர­சாங்கம் மீளக்­கு­டி­ய­மர்த்­த­வில்லை.
ஆனால் கஞ்­சி­கு­டி­யாற்றில் 224 குடும்­பங்­களும் தங்­க­வே­லா­யு­த­பு­ரத்தில் 270 குடும்­பங்­களும் தமது நிலங்­களில் சுய­மாக குடி­யேறி விவ­சாய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­வதை காணலாம். இது ஒரு புற­மி­ருக்க கிழக்கு மாகாண சபை­யினால் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் இம் மக்­க­ளுக்கு கிண­று­களை அமைப்­ப­தற்­காக வெட்­டப்­பட்ட குழிகள் உண்டு. ஆனால் கிண­றுகள் கட்­டப்­ப­ட­வில்லை.
கிண­றுகள் அமைக்க ஒதுக்­கப்­பட்ட நிதிக்கு என்ன நடந்­தது? போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­க­வென நல்­லின கறவை பசுக்கள் தங்­க­வே­லா­யு­த­பு­ரத்­திற்கு கொண்டு வரப்­பட்­டன. ஒரு சில தினங்­களில் அவற்றை கொண்டு வந்­த­வர்­களே அதனை கொண்டு சென்று விட்­டனர்.என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக