18

siruppiddy

ஜூன் 20, 2013

தனித்துவத்தை சிதைக்கும் முயற்சியில் கோத்தபாய!



  தமிழர்கள் கொண்டுள்ள தனியுரிமையை உடைத்து, அனைத்து மக்களையும் கொண்ட பகுதியை உருவாக்கும் முயற்சியில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இறங்கியுள்ளதாக தெரிகிறது.
 
 கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கோத்தபாய வழங்கிய செவ்வியின் மூலம் இந்த திட்டம் அம்பலமாகியுள்ளது.

 அந்த ஊடகத்திற்கு அவர் தெரிவித்ததாவது,

 "யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
 
 யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது.
 
 தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
 யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இன நல்லிணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். ஏனைய இனத்தவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை தொடரும் வரையில் பிரிவினைவாதத்தை ஒழிக்க முடியாது.
 
 பெரும் எண்ணிக்கையிலான வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருகின்றனர். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
 
 நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக