18

siruppiddy

ஜூன் 30, 2013

தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு?


  யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி போன்றவை காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மரணப் பதிவேடு தெரிவித்துள்ளது.
தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் அண்மைக்காலமாக தற்கொலை என்ற பெயரில் இடம்பெறும் மர்மக்கொலைகளும் இதில் அடங்கும் என்று எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இவ்வாறான மர்ம மரணங்களுக்கு சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரே காரணம் என யாழில் இருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக