18

siruppiddy

ஜூன் 24, 2013

அமைதிக்கு பங்கம் அலறுகிறார் ஆரியசிங்க !


புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
 வெளிநாடுகள், இலங்கையை பகைக்கும் வகையிலான பிரச்சாரங்களின் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
 2013ஆம் ஆண்டிற்கான சர்வதேச அபிவிருத்தி கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 சர்வதேச நாடுகள் பலவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தொடர்பில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
 இதன் மூலமாக இலங்கை தொடர்பாக தவறான அபிப்பிராயம் ஒன்றை சர்வதேச ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் முயற்சிப்பதாக ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக