18

siruppiddy

ஜூன் 25, 2013

தேர்தல் செப்டெம்பர் இறுதி வாரத்தில்


நடைபெறும் சாத்தியம் வட மாகாண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் முதல் இருவாரத்திற்குள் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், போதிய கால அவகாசம் இல்லை. ஆனால், செப்டெம்பர் 21அல்லது 28ஆம் திகதியே சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசு அறிவிப்பின் பின்னரே ஏனைய விடயங்களை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக