18

siruppiddy

ஜூன் 09, 2013

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் விபத்து:


 70 பேர் மாயம் இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக குடியேற 70 பேர்கள் படகு மூலம் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற படகு கடந்த வெள்ளியன்று கிறுஸ்துமஸ் தீவிலிருந்து 65-வது கடல் மைலில் விபத்துக்குள்ளானது.
அங்கு இறந்து மிதந்த உடல்களை மறு நாள் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட விமானம் கண்டுபிடித்தது.
இதையடுத்து 9 பேரின் உடல்கள் மட்டும் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
மேலும் 60க்கு மேற்பட்டோர் இதில் மூழ்கி இறந்து இருக்க அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மற்றும் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டதற்கு அங்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக