18

siruppiddy

ஜூன் 07, 2013

அரசியல் தீர்வொன்றை இறக்குமதி செய்ய முடியாது! இந்திய குழுவிடம்


                                                                                                           அரசியல் தீர்வொன்றை இறக்குமதி செய்ய முடியாது! இந்திய குழுவிடம்
தமிழர்களின் குறைகளைத் தீர்க்கும் நிறைவான அரசியல் தீர்வொன்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது எனவும் அது ராஜபக்ச - சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி குழுவினரை இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்த கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவான அரசியல் தீர்வொன்றை காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
எம்மால் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது.
அரசியல் தீர்வு ராஜபக்ச - சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக