18

siruppiddy

ஜூன் 24, 2013

வெலிங்டன் முகாமிலிருந்து இலங்கை அதிகாரிகள் வெளியேற்றமா?


 தொடர் போராட்டம் காரணமாக குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ மையத்தில் இலங்கை இராணுவ அதிகரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்த 2 இலங்கை இராணுவ அதிகாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இவர்கள் பெங்களூரூ அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர்கள் போதிய அளவு பயிற்சியை முடித்துவிட்டு தான் அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக