18

siruppiddy

ஜூன் 21, 2013

குடும்பநல வரிச்சலுகை திட்டம் அறிமுகம்


ஜெர்மன் நாட்டின் புதுமனத்தம்பதிகளுக்காக வழங்கப்படும் வரிச்சலுகை குடும்பமாக வாழ்பவர்களுக்கு கிடைக்குமாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வியாழக்கிழமையன்று குடும்ப நலத்துறை அமைச்சர் கிறிஸ்டினா ஷ்ரோடர் (Christina roder) தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சட்டம் குறித்து அவர் கூறுகையில், தற்போதைய நடை முறையின் கீழ் ஒரு குடும்பத்தில் இருவரும் சம்பாதிக்கின்றனர். எனவே அவர்களுடைய வருமானமானது இரண்டாக பிரிக்கப்பட்டு இருவரும் தனித்தனியே வரி செலுத்தவேண்டும்.
அதன் பின்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் யாருடைய வருமானம் அதிகமாக உள்ளதோ அவர்கள் குறித்த வரி தொகையினை கட்டினால் போதுமானது. இதனைத் தொடர்ந்து இச்சட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை, ஏனெனில் இது மாற்றப்படாத ஒன்றாகும்.
இதன் மூலம் திருமண ஜோடிகளும் அவர்களின் குழந்தைகளும் அதிக பயனடைவார்கள். மேலும் இதனடிப்படையாக குழந்தைகளின் எதிர்கால திட்டத்தினை வகுத்து கொடுக்கும் ஒன்றாகும்.
ஆனால் இச்சட்டம் குறித்து சமூக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பீர் கூறுகையில்,இச்சட்டமானது மிகவும் நியாயமற்ற ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் இது மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் இதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கிறவர்கள் மட்டுமே பயனடைய முடியும். குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு இதனால் எவ்வித பயனும் இல்லை.
இருப்பினும் ஜெர்மனி குடும்ப நட்புறவு கொள்கைகளுக்கு அதிகமாக முதலீடு செய்கின்றன. 1975-ம் ஆண்டுகளில் ஒரு பெண்னானவள் 1.25 மற்றும் 1.45 விகிதங்களில் குழந்தைகளை பெற்றெடுத்தாள், தற்போது பிறப்பவர்கள் விகிதமானது ஒரு மனிதனின் வயது போல் குறைந்துள்ளது

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக