18

siruppiddy

ஜூன் 02, 2013

தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு வர ++


 ஜாதிக ஹெல உறுமய சார்பில் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு வருவதற்கு நீண்ட காலமெடுக்கும் என்று நாடாளுமன்ற பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
இந்த தனிநபர் பிரேரணை இப்போது தான் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது பின்னர் நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டு அதன் பின்னர் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறவேண்டும். தனிநபர் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கமுடியாது ஜாதிக ஹெல உறுமயவின் இந்த தனிநபர் பிரேரணை நிறைவேறினாலும் அது பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது ஒரு நீண்ட கால நடைமுறையாகும்,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக