18

siruppiddy

ஜூன் 28, 2013

களுத்துறையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட !


 உக்ரென் பிரஜைகள் கைது சிறீலங்காவின் தென்பகுதியான களுத்துறை கட்டுக்கொரந்த பகுதியில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று உக்ரென் நாட்டுப்பிரஜைகள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த மூவரும் கட்டுக்கொரந்த பகுதியில் உள்ள வங்கியில் இருந்து கடனட்டைமூலம் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்துள்ளார்கள் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட வங்கியின் காவலாளி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களிடம் இருந்து 8இலட்சம் பணமும் 14 கடனட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக